,கடலூர் அருகே கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 20 பேருக்கு வாந்தி மயக்கம் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை!!
கடலூர் மாவட்டம்,கடலூர் அடுத்த பள்ளிப்பட்டு ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
அப்பகுதி மக்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கு உடல் உபதைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
நேற்று அதே பகுதியைச் வனிதா. பாலசுந்தரம். நந்தன் உள்ளிட்டோருக்கு திடீர் வாந்தி மயக்கம் மற்றும் உடல் உபாதைகள் ஏற்பட்டதாக தெரிகிறது
இது குறித்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர்.
கடலூர் அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனால் கடலூர் அடுத்த பள்ளிப்பட்டு ஊராட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக