பரிசு பொருட்களுடன் வீடு வீடாக சென்று 14000 குடும்பங்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த சட்டப்பேரவைத் தலைவர் ஏம்பலம். செல்வம் ஆர்!!
புதுச்சேரி மாநிலம்,தீபாவளி பண்டிகை முன்னிட்டு மணவெளி தொகுதியில் உள்ள சுமார் 14 ஆயிரம் குடும்பங்களுக்கு மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர். செல்வம் ஆர் அவர்கள் தனது சொந்த நிதியிலிருந்து தீபாவளி பரிசாக பட்டாசு பாக்ஸ், சில்வர் பாத்திரம், இனிப்புகள் அடங்கிய பரிசு தொகுப்பினை வீடு வீடாக வழங்கும் நிகழ்ச்சியை பூரணாங்குப்பம் அங்காளம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து பொது மக்களுக்கு வழங்குவதை சபாநாயகர் ஏம்பலம். செல்வம் ஆர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தொகுதி பாஜக நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி மாநில செய்தியாளர் குமரவேல்.

கருத்துகள்
கருத்துரையிடுக