திருப்பூர் குமரன் அவர்களின் 122 வது பிறந்தநாள் விழா! அமைச்சர். மு.பெ. சாமிநாதன் பங்கேற்பு!!
ஈரோடு மாவட்டம், காங்கேயம் சட்டமன்றத் தொகுதி, சென்னிமலையில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் ‘கொடி காத்த குமரன்’ திருப்பூர் குமரன் அவர்களின் 122-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தி, மணிமண்டபம் கட்டும் பணிக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி விளம்பரத் துறை அமைச்சர். மு. பெ. சாமிநாதன் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் வீட்டுவசதித்துறை அமைச்சர். சு.முத்துசாமி அவர்கள், ஈரோடு மாவட்ட ஆட்சியர். ச.கந்தசாமி இ.ஆ.ப., அவர்கள், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர். கே.இ.பிரகாஷ் அவர்கள், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர். வி.சி.சந்திரகுமார் அவர்கள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
திருப்பூர் மாவட்ட செய்தியாளர் அருண் ராஜ்.


கருத்துகள்
கருத்துரையிடுக