கபடி போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்த ஜெயக்குமார் IPS!!
கடலூர் மாவட்டம்,மாண்புமிகு தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் அரசு ஊழியர்களுக்கான பிரிவில் கபாடி விளையாட்டு போட்டியில் கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் கடலூர் காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவில் பணிபுரிந்து வரும் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கபடி, விளையாட்டு போட்டியில் பங்கேற்று ஆண்கள் அணி இரண்டாம் இடம் பெற்றும் பெண்கள் அணி முதல் இடம் பெற்று முதலமைச்சர் கோப்பையை வென்றனர். முதலமைச்சர் கோப்பையை வென்ற காவல்துறை வீரர் மற்றும் வீராங்கனைகளை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இதில் கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர். ரூபன்குமார் உடனிருந்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக