தேர்தல் நெருங்கும் நேரத்தில் தேர்தல் ஆணையத்தால் வளரும் கட்சிகள் பாதிப்பு! செய்தியாளர்களிடம் ஐசக் ஐயாபேட்டி!!
ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் வட்டம் தேர்தல் ஆணையத்தால் வளரும் சிறிய கட்சிகள் வருகிறதேர்தலில் மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகும் என அரக்கோணத்தில் செய்தியாளர்களிடம் ஐசக் ஐயா பேட்டி அளித்தார்.
அவர் மேலும் கூறியபோது. எனது தலைமையிலான அகில இந்திய ஜனநாயக கட்சி பல்வேறு தேர்தலை சந்தித்து வருகிறது இந்த நிலையில் வருகின்ற தேர்தலை சந்திக்க 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தி வருகிறோம் இந்த நிலையில் சிறுபான்மை கட்சியான எங்கள் கட்சியின் அங்கிகாரத்தை திடீரென தடை ஏற்படுத்துவது மிகவும் வருத்தமடைகிறது. வளரும் கட்சியாக உள்ள சிறுபான்மை கிறிஸ்துவ இஸ்லாமியர் கட்சிகள் தேர்தல் சந்திக்க விடாமல் தடுப்பது சட்ட விரோதமானது ஜனநாயக படுகாலைக்கு சமமானது ஆகவே நீதிமன்றத்தை அணுகி தேர்தலை சந்திக்க இருக்கிறோம் என கூறினார். இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர். ஸ்ரீதர் மணி சத்தியா உட்பட பலர் உடனிருந்தனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக