புவி வெப்பமயமாதல்: கடலூருக்கு ஆபத்து!!
புவி வெப்பமயமாதல், கார்பன் உமிழ்வு ஆகிய காரணங்களால் கடல்மட்டம் உயர்ந்துவருகிறது. இதில் சென்னை உள்பட ஏழு மாவட்டங்கள் அபாய கட்டத்தில் உள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை, பேரிடர் மேலாண்மை மையத்தின் பேராசிரியர் ராமச்சந்திரன் கூறுகையில், 1991 - 2023 வரை ஏற்பட்ட புயல், காலநிலை புள்ளி விவரங்களின்படி, 2100ஆம் ஆண்டில் கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடதுறை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 25 சென்டிமீட்டர் கடல்மட்டம் உயர்வு இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக