அறிவொளிச் சுடர் விருது பெற்ற ஆசிரியர் நூருல்லாஹ்!


மதுரை, சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் சண்சரண் சமூகம் கல்வி நல அறக்கட்டளை மற்றும் மதுரை இலக்கியப் பேரவையின் நிறுவனர் முனைவர் சண்முக திருக்குமரன் தலைமையில் ஆசிரியர்களுக்கு  அறிவொளிச் சுடர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்வில்  சிறப்பு விருந்தினர்களாக வைகை நதியின் காவலர், நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளையின் நிறுவனர், மனித நேய மாமணி ஸ்டார் குருசாமி, அருள்மிகு அவர்களும், கள்ளழகர் திருக்கோயில், அழகர் கோயில் அறங்காவலர் திருமதி.மீனாட்சி பிரியாந்த் அவர்களும், எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் பாஸ்கரராஜன் அவர்களும் மற்றும் விழாவின் தலைவர் அவர்களும் இணைந்து ஆசிரியரும் சமூக ஆர்வலருமான நூருல்லாஹ்வின் கல்விச்சேவை மற்றும் சமூகப் பணியை பாராட்டி 2025 ஆம் ஆண்டிற்கான அறிவொளிச்சுடர் விருது வழங்கி பாராட்டினார்கள். கலந்து கொண்ட ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தேனி செய்தியாளர் சின்னதம்பி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!