பரங்கிப்பேட்டை: மனநலம் பாதித்தவர் தூக்கிட்டு தற்கொலை!!
கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அடுத்த தோப்பிருப்பு தைக்கால் பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட மணிகண்டன், கடந்த மாதம் 28 ஆம் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிதம்பரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக பரங்கிப்பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக