திருப்பூர்: தொட்டிபாளையத்தில் புதிய சமுதாயக்கூடம் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்த அமைச்சர். மு. பெ. சாமிநாதன்!!
திருப்பூர் மாவட்டம், முத்தூர் பேரூராட்சி, தொட்டியபாளையத்தில் அயோத்திதாசர் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தொட்டியபாளையம் புதிய சமுதாயக்கூடம் அமைக்கும் பணியினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர். மு. பெ. சாமிநாதன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
உடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (ஈரோடு) கே.இ.பிரகாஷ் அவர்கள், (பொள்ளாச்சி) க.ஈஸ்வரசாமி அவர்கள், முத்தூர் பேரூராட்சித் தலைவர். சுந்தரம்பாள் அவர்கள் ஆகியோர் உள்ளனர்.
திருப்பூர் மாவட்ட செய்தியாளர் அருண் ராஜ்.



கருத்துகள்
கருத்துரையிடுக