பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!!
தேனி மாவட்டம்,பாசனத்திற்கு வைகை அணையில் தண்ணீர் திறப்பு தேனி மாவட்டத்தில் வைகை அணையில் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று மாண்புமிகு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க பெரியார் பாசன பகுதியில் உள்ள 85,563 ஏக்கர் ஒரு போக பாசன நிலங்களுக்கும் மற்றும் திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் உள்ள 19, 439ஏக்கர் ஒரு போக பாசன நிலங்களுக்கும் வினாடிக்கு 1,130; கன அடி வீதம் 45 நாட்களுக்கு தொடர்ச்சி யாகவும் 75 நாட்களுக்கு நீர் இருப்பதைப் பொறுத்தும் மொத்தமாக 8,493 மில்லியன் கன அளவு தண்ணீரை மாண்புமிகு தேனி மாவட்ட ஆட்சியர். ரஞ்சித் சிங் IAS மற்றும் மாண்புமிகு அமைச்சர். P, மூர்த்தி அவர்களும், எம். பி தங்க தமிழ்ச்செல்வன் அவர்களுடன் இணைந்து திறந்து வைக்கப்பட்டது.
தேனி செய்தியாளர் சின்னதம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக