திருப்பூர்: குடிமங்கலத்தில் உயர்மட்ட பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த அமைச்சர்.மு. பெ. சாமிநாதன்!!
திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், அம்மாபட்டியில் நபார்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள உயர் மட்ட பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி விளம்பரத் துறை அமைச்சர்.மு.பெ. சாமிநாதன் அவர்கள் திறந்து வைத்தார்.
உடன் மாண்புமிகு மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர். என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர். க.ஈஸ்வரசாமி அவர்கள், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்புப் பொறியாளர் (நபார்டு மற்றும் கிராம சாலைகள்) சரவணன் அவர்கள், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர். இல.பத்மநாபன் அவர்கள், பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் ஆகியோர் உள்ளனர்.
திருப்பூர் மாவட்ட செய்தியாளர் அருண் ராஜ்.



கருத்துகள்
கருத்துரையிடுக