பள்ளியில் நவராத்திரி விழா கொண்டாட்டம்!!
தேனி மாவட்டம் தேனி மேலப்பேட்டைஇந்து நாடார் உறவின்முறை ஸ்ரீ பத்ரகாளி அம்மன் நவராத்திரி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. மாணவ மாணவியர்கள் பலவித வேடங்கள் அணிந்து நவராத்திரி நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்களும் முதல்வர் பி ஜெகநாதன் அவர்களும் துணை முதல்வர்களும் ஆசிரிய பெருமக்களும் இந்நிகழ்வினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மானம் மாணவியர்களுக்கு அனைத்து நிறுவனங்களின் செயலாளர்கள் மற்றும் இணை செயலாளர்கள் பெருமக்கள் பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்.
தேனி செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக