கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி!!
கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், தமிழ்நாட்டில் இருந்து உலகத்தரமான விளையாட்டு வீரர்களை உருவாக்கிடும் நோக்கில் உழைத்திடும் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆசிகளுடன், பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையே நடக்கும் கபடி போட்டியை இன்று கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் பார்வையிட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் பரிசளித்தார்.கடந்த இரு நாட்களாக நடைபெறும் இந்த போட்டியில் பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.


கருத்துகள்
கருத்துரையிடுக