நெமிலி அருகே உளியநல்லூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்! பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஒன்றிய குழு தலைவர் பெ. வடிவேலு!!
இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியம், உளியநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் தலைமை தாங்கினார். உளியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர். ஜீவா சதாசிவம் , பெரப்பேரி ஊராட்சி மன்ற தலைவர். கலைவாணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு கலந்துகொண்டு முகாமினை பார்வையிட்டு மனுக்கள் மீது தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில் உளியநல்லூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு.பிரகாசம்

கருத்துகள்
கருத்துரையிடுக