செய்யூர் கிராமத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தரராஜப் பெருமாள் திருக்கல்யாணம்!!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், செய்யூர் கிராமத்தில் நூற்றாண்டு பழமையான ஸ்ரீதேவி, பூதேவி ஸமேத ஸ்ரீ ஸுந்தரராஜப் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது இங்கே ஒவ்வொரு வருடமும் திருக்கல்யாணம் கருட சேவை நடைபெற்று வருகிறது அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டுஸ்ரீதேவி, பூதேவி ஸமேத ஸ்ரீ ஸுந்தரராஜப் பெருமாள்திரு கல்யாணமும் மாலையில்
கருடஸேவை மஹோத்ஸவமும் நடந்தேறியது.இத்திரு கல்யாண த்தை ஸ்ரீ ஸுந்தரராஜப் பெருமாள் திருக்கோயில் பரம்பரை அறங்காவலர்கள், ஆர்டி. பலராம நாயுடு, சகோதரர் ஆர்டி.கிருஷ்ண மூர்த்தி நாயுடு குமாரர்கள். ஆர்பி. ஜெயக்குமார், ஆர்பி ரவிக்குமார், ஆர்பி.ராஜா ஆர்கே.லீலா கிருஷ்ணன், ஆர்கே லக்ஷ்மி நரசிம்மன் மற்றும் செய்யூர் கிராம பொதுமக்கள், இளைஞர்கள் இணைந்து ஈடுபட்டனர் காலை 07-00 மணிமுதல் 9-00 மஹாசாந்தி ஹோமமும் | அதனை தொடர்ந்து திருமஞ்சனமும் காலை 10-00 மணிமுதல் பகல் 1.00 மணியரை திருக்கல்யாணமும் மாலை.
6-00 மணிக்கு ஸ்ரீ கருடஸேவை திகுவீதி உலாவும் நடைபெற்றது அப்போது பக்த ஜன சபை ஸ்ரீ பால ராமாநுஜ பாலவின் பஜனையும் நடந்தது நாள் முழுவதும் அன்னதானமும் நீர்மோர் வழங்கப்பட்டது.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக