ஆற்காடு பாலாற்றில் மணல் கொள்ளை: பொலிரோ வாகனம் பறிமுதல்!!

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம், புதுப்பாடி உள்வட்டம், புதுப்பாடி கிராமத்தில் உள்ள பாலாற்றில் இரவு நேரங்களில் மணல் கொள்ளை நடைபெறுவதாக ஆற்காடு வட்டாட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று இரவு 11.50 மணியளவில் வருவாய்த் துறையினர் பாலாற்றுப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பொலிரோ வாகனத்தில் மணலை கடத்தி வந்த கும்பலை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். பின்னர், அந்த வாகனத்தை பறிமுதல் செய்து ஆற்காடு கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சோதனையில், புதுப்பாடி மற்றும் திமிரி வருவாய் ஆய்வாளர்கள், குக்குண்டி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர்கள் ஈடுபட்டனர்.

ஆற்காடு செய்தியாளர் ஆனந்த்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!