விருத்தாச்சலம்: காவலரை தாக்கிய ரவுடிக்கு துப்பாக்கி சூடு!!
கடலூர் மாவட்டம்,விருத்தாச்சலம் நகரில் இன்று அதிகாலையில் போதையில் 4 நபர்களை தாக்கி விட்டு தலைமறைவு குற்றவாளிகள் கந்தவேல் வயது 21 என்பவரை போலீசார் பிடிக்க முயன்றபோது போலீசாரை தாக்கிய கந்தவேல் என்பவரை வலது காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். மற்றொரு குற்றவாளி சிவா என்பவர் கீழே விழுந்து இடது காலில் எலும்பு முறிவு ஆகிய இருவரையும் பிடித்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரவுடி தாக்கியதில் படுகாயம் அடைந்த தலைமை காவலர்களை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S.ஜெயக்குமார் IPS அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக