உயிர்நீத்த பாமக தியாகிகளுக்கு அரக்கோணத்தில் வீரவணக்கம் !!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகர பாமக சார்பில் 1987 ல் வன்னியர் சங்க இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த 21 பேருக்கு 38ம் ஆண்டு நினைவு மற்றும் வன்னியர் சங்க தலைவர் குரு உள்ளிட்டவர்களுக்கான அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. அங்கோணம் நகர பாமக செயலாளர் டாக்டர். பாலாஜி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி நடத்தினார். மாவட்ட துணை தலைவர். ஜெ.மணி வரவேற்றார். வன்னியர் சங்க தலைவர். ஏ.எம்.சீனிவாசன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் வக்கில். சரவணன் கலந்து கொண்டு மலர் தூவி மெழுகு தீபம் ஏற்றினார். சத்தியநாராயணன், ஜோதீஸ்வரன், ரமேஷ் முதலியார் வள்ளுவன், சஞ்சய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக