சோளிங்கர் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கம் கூட்டம்!!
ராணிப்பேட்டை மாவட்டம்,காங்கிரஸ் சார்பில் நாடெங்கும் கையெழுத்து இயக்கம் கடந்த வாரம் 15 ஆம் தேதி துவங்கியது அதன் ஒரு கட்டமாக ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகரம் பேருந்து நிலையம், காமராஜர் சிலை அருகில் நகர் காங்கிரஸ் சார்பில் ஓட்டு திருட்டை தடுக்கும் கையெழுத்து இயக்க கூட்டம் நடைபெற்றது. இந்த கையெழுத்து இயக்க கூட்டத்திற்கு நகர கமிட்டி தலைவர் கோபால் தலைமை தாங்கினார் மாவட்ட தலைவர். பஞ்சாட்சரம் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் சட்ட மன்ற உறுப்பினர். AM.முனிரத்தினம் MLA அவர்கள் கலந்து கொண்டு கையெப்பமிட்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநில பொது செயலாளர். அரக்கோணம் ராஜ்குமார், ப்ரியங்கா காந்தி சங்கதன் மாநில தலைவர். உதயகுமார் மாவட்ட துணை தலைவர். மணிவேலு அரக்கோணம் ஓன்றிய தலைவர். நமச்சிவாயம் நகர தலைவர். பார்த்தசாரதி, மோகன், குமார், பிரியா ராஜன், கணேசன், பிரேம்தாஸ் மற்றும் ப்ரவீனா,உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக