ஆற்காடு: காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்!!
ராணிப்பேட்டை மாவட்டம்,ஆற்காடு அருகே சாத்தூர் கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாமின் போது கிராம நிர்வாக அலுவலர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து ராணிப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் தாக்குதல் நடத்திய வெங்கடபதி என்பவர் மீது வழக்கு பதிவு செய்தது மட்டுமின்றி அவரை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்ட நிலையில் ராணிப்பேட்டை கோட்டாட்சியரிடம் காவல் ஆய்வாளர் நாளை காலைக்குள் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த நிலையில் தற்போது காத்திருப்பு போராட்டமானது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக