நாச்சியார்பேட்டை குளத்தில் மரக்கன்றுகள் நடும் பணி!!
கடலூர் மாவட்டம்,தூய்மை சேவை 2025 விழிப்புணர்வு முன்னிட்டு, விருத்தாசலம் அடுத்த நாச்சியார்பேட்டை குளத்தில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. விருத்தாசலம் நகர்மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் மரக்கன்று நட்டு இந்த பணியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர் முத்துக்குமரன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வு தூய்மைப் பணியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக