விருத்தாசலம்: போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி!!
கடலூர் மாவட்டம்,விருத்தாசலம், கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில், உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர். பாலகிருஷ்ணன் தலைமையில், கல்லூரி முதல்வர். முனியன் முன்னிலையில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இம்மாபெரும் பேரணியில் விருத்தாசலம் காவல்துறையினர், கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு, கல்லூரி வளாகத்தில் இருந்து விருத்தாசலம் பேருந்து நிலையம் வரை விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக