கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற குற்ற கலந்தாய்வு கூட்டம்!!
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் கடலூர் மாவட்டகாவல்கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் விரைந்து முடிக்க வேண்டும் எனவும் கடலூர் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். கலந்தாய்வு கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் K. கோடீஸ்வரன், V. ரகுபதி மற்றும் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் பங்கேற்றனர். கலந்தாய்வு கூட்டத்தில் கடலூர் மாவட்ட காவல்துறையில் கடந்த ஆகஸ்ட் மாதம் மெச்சதகுந்த பணிபுரிந்த காவல் ஆய்வாளர்கள். முத்துக்குமார், பாரதி, தமிழரசி, ஜெர்மின் லதா, ராஜாராமன், வீரசேகரன். உதவி ஆய்வாளர்கள். ஆனந்தகுமார், எழிலரசி, பிரசன்னா, சுப்பிரமணியன், அண்ணாமலை, சுரேஷ் முருகன், பாஸ்கர், செந்தில்குமார், சந்திரா, அமிர்தலிங்கம், பாரதி சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் என 71 காவல்துறையினருக்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக