நாமக்கல் மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற திமுக கழக துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்!!
நாமக்கல் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, கழக இளைஞரணிச் செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், உதயநிதி ஸ்டாலின்அவர்களின் நல்லாசிகளுடன், நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக இளைஞரணி சார்பில், மாவட்ட, மாநகர, பகுதி, நகர, ஒன்றிய, பேரூர் கழக இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம், இன்று நாமக்கல் கலைஞர் அறிவாலயத்தில் உள்ள இனமான பேராசிரியர் அரங்கத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் கழக இளைஞரணி துணைச் செயலாளர், மாண்புமிகு மக்களவை உறு்பினர்.கே. இ. பிரகாஷ், நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர், மாண்புமிகு மக்களவை உறுப்பினர். கே.ஆர்.என். இராஜேஷ்குமார் சிறப்புரையாற்ற, மாண்புமிகு நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர்.பெ. ராமலிங்கம், கழக இளைஞர் அணி துணைச் செயலாளர் தம்பி .சி. ஆனந்தகுமார், நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தம்பி.சி. விஷ்வநாத், இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.



கருத்துகள்
கருத்துரையிடுக