கடலூரில் வெயில் தாக்கம் குறைவு: பரவலாக மழை!!
கடலூர் மாவட்டத்தில் சில நாட்களாக நிலவி வந்த அதிக வெயிலின் தாக்கம் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை பெய்த மழையால் குறைந்துள்ளது. இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, குறிஞ்சிப்பாடி பகுதியில் அதிகபட்சமாக 2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடலூர் ஆட்சியர் அலுவலகம் மற்றும் கடலூர் நகரிலும் முறையே 1.9 மில்லி மீட்டர் மற்றும் 1.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக