பளுதூக்கும் போட்டியில் மாணவி மண்டல அளவில் வெற்றி!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ட்ரீமர்ஸ் போர்ட்ஸ் அகாடமியைச் சேர்ந்த மாணவி B. நாகலட்சுமி ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி யில் பயிலும் மாணவி தேனி மாவட்டத்தின் சார்பாக மதுரை எம் ஜி ஆர்.ஸடேடியத்தில் நடைபெற்ற
மண்டல அளவிலான மாண்புமிகு முதலமைச்சர் கோப்பை 2025 பள்ளிகளுக்கான போட்டியில் பங்கு பெற்று மண்டல அளவில் தேர்வு செய்யப்பட்டு மாநில அளவில் பங்கு பெற உள்ளார். முதன்முறையாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிக்கு ஆண்டிபட்டி ட்ரீமர்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி யின் பயிற்சியாளர் P. முத்துகிருஷ்ணன் அவர்கள் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தேனி செய்தியாளர் சின்னதம்பி


கருத்துகள்
கருத்துரையிடுக