லாலாபேட்டை: காஞ்சனகிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வல்லாம்பிகை சமேத அருள்மிகு ஸ்ரீ சதாசிவே ஈஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற மஹா கும்பாபிஷேக குடமுழுக்கு விழா!!
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா தாலுக்கா, முகுந்த்ராயபுரம் ஊராட்சி லாலாபேட்டை காஞ்சனகிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்தரும் ஸ்ரீ வல்லாம்பிகை சமேத அருள்மிகு ஸ்ரீ சதாசிவே ஸ்வரர் திருக்கோயில் மற்றும் பரிவார ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஸ்ரீ ஆதி அந்த பிரபு ஸ்ரீ சொர்ணா ஆகர்ஷனை பைரவர் நவக்கிரகங்கள் சங்கடம் தீர்க்கும் சனி பகவான் மற்றும் நந்தீஸ்வரர் பாரத மாதா ஜெய் ஹிந்தி ஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் குடமுழக்கு விழா நடைபெற்றது.
ஸ்ரீ நவ சபரி ஐயப்பன் சிப்காட் ஆலயம் குருசாமி ஜெயச்சந்திரன்காஞ்சனகிரி அறக்கட்டளை நேதாஜி நடேச கவுண்டர் ஆகியோர் தலைமையில்.மங்கல இசை , இரண்டாம் காலம் யாக பூஜை , யாத்ரா தானம் ,மகாபூர்ணா கோபுர கும்பாபிஷேகம் , மூலவர் கும்பாபிஷேகம் , மகாதீப ஆராதனை, தீர்த்த பிரசாதம் அன்னதானம் வழங்குதல்.வரலாறு
ஸ்ரீ திருவலம் விஸ்வநாத ஈஸ்வரருக்கும் நீவா நதிக்கும் கிழக்கே காஞ்சனகிரிக்கு தென்கிழக்கு திசையில் லாலாபேட்டை க்கு வடகிழக்கு கணவாயில் அமைந்துள்ள உத்திராயண புண்ணிய காலத்தில் தை பத்தாம் நாள் இறைவனே வந்து கஞ்சன் அரக்கனுக்கு சிவபெருமாள் தர்ப்பணம் செய்யும் நிகழ்வானது காலாகாலமாக நடைபெற்று வருகிறது .
உலகத்தில் எங்கும் இல்லாத தனி சிறப்பு கொண்ட சிவபெருமான் ஆகும். இந்த இடம் காசிக்கும் ராமேஸ்வரத்திற்கும் இயல் கொண்ட பித்ரு சாபத்தையும் ஜாதகத்தில் அமைந்திருக்கும் அனைத்து தோஷத்திற்கும் நிவர்த்தி செய்யும் புண்ணிய பூமி ஆகும் .
காஞ்சனகிரி அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஜெகத் மக்கள், சிவனடியார்கள் மலை சுற்று புற கிராம பொதுமக்கள்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.




கருத்துகள்
கருத்துரையிடுக