அரக்கோணத்தில் இன்று துவக்கி வைக்கப்பட்ட நகரும் சோதனை சாவடி!!

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர். அய்மன் ஜமால், இ.கா.ப.,அவர்களின் உத்தரவின் பெயரில் காவல் துணை கண்காணிப்பாளர், அரக்கோணம் Y.  ஜாபர் சித்திக் அவர்களின் முயற்சியில் அரக்கோணம் உட்கோட்ட பகுதிகளில் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக "நகரும் சோதனைச் சாவடி" இன்று இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜெ. யு சந்திரகலா, இ.ஆ.ப ., அவர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர் இணைந்து துவக்கி வைக்கப்பட்டது.

இந்த சோதனைச் சாவடியானது  பல்வேறு பிரத்தியேக கருவிகள் கொண்டு அமைந்துள்ளது. இணைய வழி கண்காணிப்பு கேமராக்கள், புலன்விசாரணை மென்பொருள் கருவிகள், தடய அறிவியல் கருவிகள், செல்போன் ஆய்வு மென்பொருள் கருவி என புலன் விசாரணைக்கு தேவையான அனைத்து அடிப்படை கருவிகளை உள்ளடக்கிய இன்வேஸ்டிகேஷன் யூனிட் மற்றும் அசாதாரண சூழ்நிலைகளில் சட்ட ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வர தேவையான லத்தி, கிரவுட் கண்ட்ரோல் ரோப், கிரவுட் மேனேஜ்மென்ட் பேரிகேட்ஸ், சர்ச் லைட்,   வார்னிங் லைட், பிரேக்கர், லேடர் என அசாதாரண 

நிலைகளில் பொதுமக்களை பாதுகாக்க தேவையான அனைத்து கருவிகளும் உள்ளடக்கிய கண்ட்ரோல் யூனிட் ஒன்றும் உள்ளது.மேலும், காவலர்கள் ஓய்வெடுப்பதற்காக லைட் பெட் மற்றும் தடையில்லா மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது.மேலும்  இந்த நகரும் சோதனை சாவடியானது தேவைக்கேற்ப பல்வேறு கிராமங்களில் முகாமிட்டு அசாதாரண பிரச்சினைகளை கையாளுவதற்கும்  சம்பவம் நடந்த இடத்திலேயே புலன் விசாரணை மேற்கொள்ள மிகவும் பயனுள்ளதாக அமையும்.

 இந்நிகழ்ச்சியில் தொடர்ச்சியாக அரக்கோணம் உட்கோட்ட பகுதிகளில் காணாமல் போனதாக புகார் தெரிவிக்கப்பட்டு கண்டுபிடிக்கப்பட்ட  சுமார்  10 லட்சம் மதிப்புடைய   54 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. காவல் உதவி செயலி குறித்த‌ விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இணைந்து கையொப்பமிட்டு விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கி வைத்தனர்.

 இந்நிகழ்ச்சியில் அரக்கோணம் ஆய்வாளர். அரக்கோணம் நகர காவல் ஆய்வாளர். சந்திரகுமார், அரக்கோணம் கிராமிய காவல் ஆய்வாளர்.   சிவகுமார், அரக்கோணம் வட்டாட்சியர். வெங்கடேசன், அரக்கோணம் நகராட்சி ஆணையர். ஆனந்தன், பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!