கரூரில் மெல்லிய மெத்தைகள் தைய்க்கும் இயந்திரத்தை அமைச்சர்.ஆர். காந்தியுடன் இணைந்து துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி!!
கரூர்மாவட்டம்,தொழில் முனைவோர்களின் தோழர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் மாவட்ட கைத்தறித் துறை சார்பாக, கரூர் சட்டமன்ற தொகுதி, வடிவேல்நகர், வேலுச்சாமிபுரம் தியாகி குமரன்
கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்தில், மெல்லிய மெத்தைகள் தைக்கும் இயந்திரத்தை, மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர்.ஆர். காந்தி அவர்களுடன் முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் இணைந்து இன்று பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.



கருத்துகள்
கருத்துரையிடுக