கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் அருகே எஸ். புதுப்பாளையத்தைச் சேர்ந்த 35 வயது தொழிலாளி கோதண்டபாணி, அடிக்கடி வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு வந்தார். சம்பவத்தன்று வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக காடாம்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக