கரூரில் நடைபெற உள்ள திமுக கழக முப்பெரும் விழா!!
கரூர்மாவட்டம்,ஒவ்வொரு திமுக தொண்டனின் உணர்வு பெருவிழாவான "கழக முப்பெரும் விழா" வரும் 17ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் உள்ள கோடாங்கிப்பட்டியில் மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு கோடாங்கிப்பட்டியில், நடைபெற்று வரும் விழா முன்னேற்பாட்டுப் பணிகளை அமைச்சர். கே. என். நேரு அவர்கள் இன்று நேரில் ஆய்வு செய்தார்.அப்போது, மேடை அலங்காரப் பணிகளை பார்வையிட்டதோடு, வாகன நிறுத்துமிடம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது கரூர் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான வி. செந்தில் பாலாஜி அவர்கள், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர். சிவகாமசுந்தரி அவர்கள், ஆகியோருடன் கழக நிர்வாகிகள் மற்றும் கழக மூத்த முன்னோடிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.



கருத்துகள்
கருத்துரையிடுக