புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற ஒன்றிணைவோம் மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி!!
கடலூர் மாவட்டம் புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் சார்பாக "ஒன்றிணைவோம்" என்ற மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கடலூர் மாவட்ட ஆட்சியர். சிபி ஆதித்ய செந்தில்குமார் IAS, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள்கல்லூரிமாணவ,மாணவிகளிடம் சிறப்புரையாற்றி, "சமூக நீதியை நிலைநாட்டுவதில் மாணவர்களின் பங்கு" என்ற தலைப்பில் நடைபெற்ற நாடக போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்.A. மனிஷா, முனைவர்.M. சுவாமிநாதன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் .V. லதா, புள்ளியியல் ஆய்வாளர். S. ரவிசங்கர் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக