சிறுகரம்பலூர்: செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா!!
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே சிறுகரம்பலூர் ஊராட்சியில் உள்ள ஸ்ரீ செல்லியம்மன், ஸ்ரீபெருமாள், ஸ்ரீஅய்யனார் கோவில்களின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் திரளாகக் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து விழாவைக் கண்டு மகிழ்ந்தனர். இந்த விழா அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக