கல்வி சர்வதேச பொதுப்பள்ளி மிகப்பெரிய சாதனை!!
தேனிமாவட்டம்,தேனி: தேவதானப்பட்டியில் அமைந்துள்ள கல்வி சர்வதேச பொதுப்பள்ளியில் நேற்று (15.09.2025 ) எம். எஸ். எஸ். சி. சகோதயா டேக்வாண்டோ 2025 போட்டிகள் நடைபெற்றது. இவற்றில் தேனி மாவட்டத்தில் உள்ள சி. பி. எஸ். சி பள்ளிகள் பல கலந்துகொண்டன. இவற்றில் அனைத்து பிரிவுகளிலும் கல்வி சர்வதேச பொதுப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 37 தங்கப்பதக்கங்கள், 9 வெள்ளிப்பதக்கங்கள், 2 வெண்கலப்பதக்கங்களைப் பெற்று மிகப்பெரிய சாதனை படைத்துள்ளனர் கல்வி சர்வதேச பொதுப்பள்ளி மாணவர்கள். இவற்றிற்க்கு பள்ளியின் தலைவர். முனைவர். செந்தில் குமார் அவர்கள், பள்ளியின் தாளாளர். குமரேஷ் அவர்கள், பள்ளியின் இயக்குநர். கோவிந்தன் அவர்கள், பள்ளியின் முதல்வர். புவனா அவர்கள், பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தங்களது வாழ்த்துகளை வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கூறி மகிழ்ந்தினர்.
தேனி செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக