சுருளி அருவியில் சாரல் விழா!!
தேனி மாவட்ட நிர்வாகம்,சுற்றுலாத்துறை சார்பில் செப்டம்பர் 27 , 28 இல் சுருளி அருவியில் சாரல் விழா நடக்கிறது. தினமும் காலை 10:30 மணி முதல் மாலை 6 மணி வரை பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், கிராமிய கலை நிகழ்ச்சிகள், நாய்கள் கண்காட்சி நடக்கிறது.தோட்டக்கலை துறை சார்பில் பூச்செடிகள், மரக்கன்றுகள் கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது. சிறுதானிய உணவு அரங்குகள் அரசு துறைகளில் விழிப்புணர்வு அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. விழாவை முன்னிட்டு பொதுமக்கள் சுற்றுலா பயணிகளுக்காக குடிநீர் வசதி .வாகன நிற்கும் இடம். சிறப்பு பஸ்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .பொதுமக்கள் பங்கேற்று விழாவை சிறப்பிக்குமாறு தேனி மாவட்ட ஆட்சியர். ரஞ்சித் சிங் IAS அவர்கள் தெரிவித்துள்ளார்.
தேனி செய்தியாளர் சின்ன தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக