நடுவீரப்பட்டு கைலாசநாதர் ஆலய திருவிளக்கு பூஜை!!
கடலூர் மாவட்டம், நடுவீரப்பட்டு கிராமத்தில் உள்ள அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் ஆலயம் மற்றும் முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிஷேக முதலாம் ஆண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இந்த விழா பக்தர்களுக்கு ஆன்மீக அனுபவத்தை வழங்கியது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக