தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பட்டா கேட்டு போராட்டம் !!
தேனி மாவட்டம்,தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பட்டா கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தடையை மீறி கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைந்து புகார் பெட்டியில் மனுக்களை போட்டு விட்டு சென்றனர். தேனி அல்லிநகரம், சமதர்மபுரம் ,பிசி பட்டி பகுதியில் குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டா வழங்காததால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக