சிதம்பரம்: மனைவி கண்டித்ததால் இளைஞர் தற்கொலை!!
கடலூர் மாவட்டம்,காட்டுமன்னார்கோவில் அருகே ராதா நல்லூர் தெற்கு தெருவைச் சேர்ந்த வேல்முருகன் (30) மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால், அவரது மனைவி உமாதேவி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த வேல்முருகன், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இது குறித்து புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக