திருவாமூர்: பள்ளி வகுப்பறை கட்ட அடிக்கல்!!
கடலூர் மாவட்டம், நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருவாமூர் ஊராட்சியில், தமிழக அரசின் நபார்டு திட்டத்தின் கீழ் 1.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஐந்து வகுப்பறைகள் கொண்ட பள்ளிக் கட்டடம் கட்டும் பணிக்கு நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக