சிதம்பரம்: ராமசாமி செட்டியார் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு காவல்துறை சார்பில் நடைபெற்ற கல்வி மற்றும் ஒழுக்கம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்!!
கடலூர்மாவட்டம்,சிதம்பரம் நகரில் உள்ள அரசு உதவி பெறும் ராமசாமி செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
சமீபத்தில் பள்ளியின் மதில் சுவர் ஏறி குதித்து மாணவர்கள் சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆனதையொட்டி ஆய்வாளர் அவர்கள் அப்பள்ளிக்குச் சென்று மாணவர்களிடையே கல்வி மற்றும் ஒழுக்கம் உடற்பயிற்சி விளையாட்டு ஆகியவற்றை பற்றியும் போதை பொருட்கள் தீமைகள் பற்றியும் போக்குவரத்து விதிகள் பற்றியும் எடுத்துக் கூறி மாணவர்களிடையே உரையாற்றினார் தலைமை ஆசிரியர். ஜெயராமன் அவர்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக