முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பெண்கள் சாலை மறியல்!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வருசநாடு மாநில நெடுஞ்சாலையில் அடக்கம் பட்டி என்ற கிராமத்தில் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் அடைக்கம்பட்டி கிராமத்தில் கடந்த ஆறு மாதங்களாக முறையான குடிநீர் வழங்கவில்லை என்று புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று காலி குடங்களை வைத்து பெண்கள் மறியலில் ஈடுபட்டனர். மறியலினால் ஆண்டிபட்டி வருஷநாடு போக்குவரத்து நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது இதனை அடுத்து குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதை அடுத்து மறியலில் இருந்து களைந்து சென்றனர்.
தேனி செய்தியாளர் சின்னதம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக