கரூரில் நடைபெற்ற துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்!!
கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, கழக இளைஞரணிச் செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடுதுணைமுதலமைச்சர்,உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் மாவட்ட கழக இளைஞரணி சார்பில், மாவட்ட, மாநகர, பகுதி, நகர, ஒன்றிய, பேரூர் கழக இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம், இன்று கரூர் ஆர்த்தி ஹோட்டல், அழகம்மை மஹாலில் மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் பங்கேற்று நிகழ்ச்சி சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் கழக இளைஞரணி துணைச் செயலாளர், மாண்புமிகு மக்களவை உறுப்பினர்,கே. இ. பிரகாஷ் சிறப்புரையாற்ற, மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.



கருத்துகள்
கருத்துரையிடுக