நெமிலியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்! அமைச்சர்.ஆர். காந்தி தொடங்கி வைத்தார்!!
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி நகரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர். சந்திரகலா IAS அவர்கள் முகாமிற்கு தலைமை தாங்கினார். வட்டார மருத்துவர். மேகலா வரவேற்றார். கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர். ஆர். காந்தி அவர்கள் விழாவில் கலந்து கொண்டு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து ஒவ்வொரு மருத்துவ துறைக்கும் சென்று ஆய்வு நடத்தினார். பிறகு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
நெமிலி ஒன்றிய பெருந் தலைவரும், கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான பெ.வடிவேலு, மத்திய ஒன்றிய திமுக செயலாளர். எஸ். ஜி. சி. பெருமாள், மேற்கு ஒன்றிய திமுக செயலாளர். ஆர். பி. ரவீந்திரன் மாவட்ட கவுன்சிலர். சுந்தரம்மாள் பெருமாள், சயனாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி வடிவேலு, நெமிலி பேரூராட்சி மன்ற தலைவர். ரேணுகாதேவி சரவணன், பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர். சரவணன் நெமிலி ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர். ராகேஷ் ஜெயின்,
ஒன்றிய துணைச் செயலாளர் வழக்கறிஞர். தமின் அன்சாரி உள்ளிட்ட கட்சியினர், மருத்துவத் துறையினர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையினர் மற்றும் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக