பத்திரக்கோட்டை: மகளை காணவில்லை என தாய் புகார்!!
கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அருகே பத்திரக்கோட்டை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 20 வயதான சுஷ்மிதா, செவிலியர் பயிற்சி படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் காணாமல்போனார். பல இடங்களில் தேடியும் அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தாய் அளித்த புகாரின் பேரில், நடுவீரப்பட்டு காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக