ராணிப்பேட்டை மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் உறுதியேற்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம்!
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் உறுதியேற்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் இராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இதில் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும் கைத்தறி & துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணி & நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ.வேலு அவர்கள் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் S.ஜெகத்ரட்சகன் மற்றும் கழக சுற்றுசூழல் அணி மாநில துணை செயலாளர் ஆர்.வினோத் காந்தி ஆகியோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்கள். மேலும் இதில் வினோத் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நகர பேருர் செயலாளர்கள் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கழகத்தினர் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளரும் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் J.L.ஈஸ்வரப்பன் நன்றி தெரிவித்தார்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவக்குமார்

கருத்துகள்
கருத்துரையிடுக