விருத்தாசலம்: எம்.எல்.ஏ நேரில் சென்று ஆறுதல்!!
கடலூர்மாவட்டம்,விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காங்கிரஸ் பேரியக்க பொறுப்பாளர்கள் திருநெல்வேலியில் நடைபெறும் மாநில மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது அதிகாலையில் விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர். எம்.ஆர்.ஆர். இராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மருத்துவமனைக்குச் சென்று ஆறுதல் கூறி, தேவையான உதவிகளைச் செய்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக