புதுச்சேரி அரசு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் துறை சார்பில் நடைபெற்ற தேசிய விளையாட்டு தினம்!!
புதுவை மாநிலம்,புதுச்சேரி அரசு, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் துறை சார்பில் தேசிய விளையாட்டுதினம்கொண்டாடப்பட்டது.கடற்கரை சாலை, காந்தி சிலை அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைவரும் தேசிய விளையாட்டு தின உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். மாண்புமிகு துணைநிலை ஆளுநர். K.கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இளைஞர்களின் சைக்கிள் ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர். R. செல்வம், மாண்புமிகு உள்துறை அமைச்சர். ஆ.நமச்சிவாயம், மாநிலங்களவை உறுப்பினர். S.செல்வகணபதி, தலைமைச் செயலர். சரத் சௌகான், காவல்துறை தலைமை கண்காணிப்பு அதிகாரி A.K. சிங்ளா, செய்லர். ஜெயந்த குமார் ரே ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி மாநில செய்தியாளர் குமரவேல்.



கருத்துகள்
கருத்துரையிடுக