நெல்லிக்குப்பம்: நகராட்சி அலுவலகம் முற்றுகை!!
கடலூர் மாவட்டம்,பண்ருட்டி அடுத்த நெல்லிக்குப்பம் தென்பெண்ணை ஆற்றில் நகர்புற குடிநீர் மேம்பாட்டு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விஸ்வநாதபுரம் கிராம மக்கள் நெல்லிக்குப்பம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கிராம மக்கள் சார்பில் கவுன்சிலர் பன்னீர்செல்வம், ஆணையர் கிருஷ்ணராஜன் மற்றும் நகரமன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் அவர்களிடம் மனு கொடுத்தனர். இந்த திட்டத்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக