நல்லாசிரியருக்கு நகர மன்ற தலைவர் வாழ்த்து!!
கடலூர் மாவட்டம்,பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் படை அலுவலராக பணிபுரிந்து வரும் முனைவர் ராஜா. ஆ அவர்களுக்கு சிறந்த ஆசிரியர்களுக்கான டாக்டர். ராதாகிருஷ்ணன் விருது மாநில நல்லாசிரியர் வழங்கப்பட்டுள்ளது.
நல்லாசிரியர் விருது பெற்ற தேசிய மாணவர் படை அலுவலர். ராஜா அவர்களுக்கு பண்ருட்டி நகர மன்ற தலைவரும்,பள்ளி வளர்ச்சி குழு தலைவருமானதமிழ்த்திரு.க.ராஜேந்திரன் அவர்கள்பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
உடன் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர்.ஏ. வீ.லோகநாதன், பள்ளி வளர்ச்சி குழு துணை தலைவர்.E. பழனி திருவள்ளுவர் முத்தமிழ்ச் சங்கத்தின் பொறுப்பாளர்கள் புலவர். ரத்தின ஆறுமுகம்,பெரியவர். ராமசாமி ஆசிரியர். கோ.மேதகன் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக