மதுரை: வலையபட்டி மண்பவுல் ஹூதா அரபி பாடசாலையின் ஒன்பதாம் ஆண்டு நிறைவு விழா!!
மதுரைமாவட்டம்,மதுரை வலையபட்டி மண்பவுல் ஹூதா அரபி பாட சாலையின் 9ம் ஆண்டு நிறைவு விழா வலையபட்டி ஜும்ஆ பள்ளிவாசலில் மாலை 7 மணி முதல் மிகச் சிறப்பாக நடைபெற்றது,
ஜபருல்லாஹ் தலைவர், ஜூம்ஆ பள்ளிவாசல் வலையபட்டி அவர்கள் தலைமை தாங்கினார்கள் அம்சு செயலாளர், ஜூம்ஆ பள்ளிவாசல் வலையபட்டி
நூர் முஹம்மது பொருளாளர். ஜூம்ஆ பள்ளிவாசல் வலையபட்டி அர்ரையான் இஸ்லாமிய சமூக நல அமைப்பு இளைஞர்களும் முன்னிலை வகித்தார்கள், பள்ளப்பட்டி மௌலானா மௌலவி முஹம்மது அல்தாப் அலி உலவி நிறுவனர்& தாளாளர். JAM மகளிர் அரபுக் கல்லூரி மதுரை அவர்களும், மௌலானா மௌலவி முஹம்மது யூசுப் பிலாலி மேற்பார்வையாளர். கிரீன் அக்குவா பெருங்குடி மதுரை அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள். மௌலானா அலாவுதீன் ஆலிம்
இமாம், ஜூம்ஆ பள்ளிவாசல் வலையபட்டி அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். விழாவின் இறுதியில் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது, இவ்விழாவில் 100க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
தேனி செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக